ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டுமென திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள பதவிகளுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 13}ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் ஆன்}லைனில் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், அவர்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். மேலும், இந்த மாதம் இறுதியில் விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.