பரிகார பூஜைக்குப் பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரகார மண்டபம் இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பெண் ஒருவர் பலியானார். இதையடுத்து கோயில் நடை உடனே அடைக்கப்பட்டது. பரிகார பூஜைக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது பரிகார பூஜை முடிவடைந்த நிலையில் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கோயில் பிரகார மண்டபம் இடிந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.