கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு காணப்படுகிறது. இதன் காரணமாக, கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும் என்றார் அவர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்காலில் 20 மி.மீ., நாகையில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.