சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் பேருந்து ஒன்று வெள்ளிக்கிழமை காலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
அச்சமயம் விமானம் ஒன்று தரையிறங்கிக்கொண்டிருந்தது. மேலும் சில விமானங்கள் பயண நேரத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தது. இதனால் விமானநிலையத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இன்டிகோ ஏர்லைன்ஸைச் சேர்ந்த அந்தப் பேருந்து அப்போதுதான் விமானப் பயணிகளை பத்திரமாக முனையத்துக்கு கொண்டு சேர்த்துவிட்டு, அடுத்த விமானத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொள்ள திரும்பிக்கொண்டிருந்தது.
அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தற்செயலாக அந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.
இதனால் மேற்கொண்டு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலை காரணமாக விமான நிலையத்தில் சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.