பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு: முதல்வர் இன்று பதிலுரை

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் புதன்கிழமையுடன் நிறைவடைகிறது.

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் புதன்கிழமையுடன் நிறைவடைகிறது.
15-வது சட்டப் பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையுடன் கடந்த 23-இல் தொடங்கியது. அன்று மாலையே மிக முக்கியமான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இதன்பின்னர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு கடந்த 24-இல் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம், மருத்துவப் படிப்புகளில் இப்போதுள்ள நடைமுறையே தொடர்வது உள்ளிட்ட முக்கிய சட்ட மசோதாக்கள் இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டன. இவை புதன்கிழமையன்று நிறைவேற்றப்பட உள்ளன.
முதல்வர் இன்று பதிலுரை: காலை பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறுகிறது. இதன்பின், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துப் பேசுகிறார். இதன் பின்னர், மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com