"முதல்வராக ஓ.பன்னீர்செல்வமே நீடிக்க வேண்டும்: துரைமுருகன்

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வமே நீடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறினார்.
"முதல்வராக ஓ.பன்னீர்செல்வமே நீடிக்க வேண்டும்: துரைமுருகன்

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வமே நீடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறினார்.
சட்டப் பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "ஆளுநர் உரையில் பல நல்ல திட்டங்கள் உள்ளன. அதைப் பாராட்ட எதிர்க்கட்சிகளுக்கு மனமே இல்லை' என்றார்.
அப்போது, துரைமுருகன் குறுக்கிட்டுக் கூறியது:
எதிர்க்கட்சிகள் மனதாரப் பாராட்டவில்லை என்று முதல்வர் கூறினார். இப்போது பாராட்டுகிறேன். முதல்வராக நீங்களே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றார். அப்போது, திமுக எம்எல்ஏக்கள் சிரித்தனர். ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் அமைதி காத்தனர்.

பணிவு காட்டுவதில் விஞ்சிவிட்டார்!  திமுக எம்எல்ஏவுக்கு ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு
சென்னை, பிப். 1: பணிவுக்குப் பணிவு காட்டும் தன்னையே திமுக எம்எல்ஏ புகழேந்தி விஞ்சிவிட்டார் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டப் பேரவையில் சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து புகழேந்தி பேசும்போது, கைகளைக் கட்டிக் கொண்டு பவ்வியமாகப் பேசினார். இதையடுத்து, தனது பதில் உரையில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
பாலப் பருவத்தில் பள்ளிக்கூடத்தில் இருப்பதுபோல புகழேந்தி அவையில் கையைக் கட்டிக் கொண்டு பேசினார். பணிவுக்குப் பணிவு காட்டும் என்னையே (ஓ.பன்னீர்செல்வம்) விஞ்சிவிட்டார் என்றார்.
புகழேந்தி செய்ததை கேலி செய்யாமல் நகைச்சுவையாகவே முதல்வர் குறிப்பிட்டது அவையில் எம்எல்ஏக்களிடையே சிரிப்பை ஏற்படுத்திவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com