கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை

கடலூர் மத்திய சிறையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதி இன்று தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடலூர்: கடலூர் மத்திய சிறையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதி இன்று தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் கிழ்க்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை ராஜமாணிக்கம் சிறை வளாகத்திற்குள் தன்னிடம் இருந்து கைலியால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

சிறை கைதி தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய சிறைச்சாலைக்குள் கைதி தற்கொலை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மத்திய சிறையில் கடந்த 6 மாதத்தில் 5 கைதிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com