கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ் பரப்புரை ரத யாத்திரை: பிப்.12-இல் தொடக்கம்

தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வி, தாய்மொழிக் கல்வி போன்றவற்றை வலியுறுத்தி "தமிழ் பரப்புரை' ரத யாத்திரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வி, தாய்மொழிக் கல்வி போன்றவற்றை வலியுறுத்தி "தமிழ் பரப்புரை' ரத யாத்திரை நடைபெற உள்ளது.
இந்த ரத யாத்திரைக்கு பன்னாட்டு தமிழுறவு மன்றம், அனைத்துத் தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்த ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளன.
"தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை' என்ற கருத்தை மையமாகக் கொண்டு கன்னியாகுமரி முதல் சென்னை வரை 25-வது ஆண்டு தமிழ் பரப்புரை ரத யாத்திரை (ஊர்திப் பயணம்) வரும் பிப். 12-ஆம் தேதி தொடங்கவுள்ளது. வா.மு.சேதுராமன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ரத யாத்திரை பிப்ரவரி 12-ஆம் தேதியன்று கன்னியாகுமரியில் தொடங்கி, பிப்ரவரி 21-ஆம் தேதி சென்னையில் நிறைவடையும் என்று பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com