திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அவர்கள் 4 பேரும் உயர் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
கடந்த ஜூலை மாதம் முதல் பன்றிக் காய்ச்சல் பாதித்து 20 பேர் உயிரிழந்தனர். கடந்த ஒரே மாதத்தில் 4பேர் உயிரிழந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அரசு மருத்துவமனையில் நேற்று மட்டும் 40க்கும் மேற்பட்டோருக்கு பன்றிக் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.