மாறன் சகோதரர்கள் விடுவிப்பு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மாறன் சகோதரர்கள் விடுவிப்பு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு


புது தில்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

2014ம் ஆண்டு சிபிஐ தொடர்ந்த ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து நேற்று பிறப்பிக்கப்பட்ட சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேலும், மாறன் சகோதரர்களின் சொத்துக்களை விடுவிக்க அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்ரவரி 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், மேல்முறையீட்டு மனு மீது விரிவான விசாரணை நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com