பஸ்சில் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல்

ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்ட 5 கிலோ தங்க கடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட

சென்னை: ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்ட 5 கிலோ தங்க கடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு சுமார் 5 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றில் 5 கிலோ தங்க கட்டிகள் சூட்கேசில் துணியால் சுற்றி மறைத்து கடத்தி வருவதாக திருவள்ளுர் மாவட்டம், ஆரம்பாக்கம் காவல்நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தகவல் அளித்தார்.

இதையடுத்து ஆரம்பாக்கம் காவல்நிலைய போலீஸார், சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலயில் உள்ள போலீஸ் செக் போஸ்டில் அதிகாலை 3 மணி முதல் ஒவ்வொரு பேருந்தாக சோதனை செய்தனர். அப்போது, தனியார் பேருந்தில் ஒன்றை சோதனை செய்ததில், சூட்கேசில் துணியால் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அந்த சூட்கேஸ் பெட்டி யாருடையது என்று கேட்டனர். யாரும் பதில் அளிக்கவில்லை. ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர்களிடம் விசாரித்தனர். இதையடுத்து பஸ்சில் பயணம் செய்த 5 பேரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com