சென்னை: ஜெயலலிதாவுக்கு நிகரானவராக சசிகலாவை கருத முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
அதிமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிகரானவராக சசிகலாவை கருத முடியாது எனவும் அதிமுக எம்எல்ஏக்கள் அவசரபடமால் இருந்திருக்கலாம் என்று கூறினார். சசிகலா முதல்வராக வரும் போது மற்ற கட்சித் தலைவர்களும், தமிழக மக்களும் கேள்வி கேட்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
சவாலான சூழல்களை பன்னீர்செல்வம் திறம்பட கையாண்டவர் என அவர் தெரிவித்தார். இருப்பினும் சசிகலாவை சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யதிருப்பது அதிமுகவின் உரிமை என தமிழிசை விமர்சித்துள்ளார்.