புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 வயது ஆண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.
ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, விவசாயி. இவரது 3 வயது மகன் கவினேஷுக்கு (3) கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கவினேஷுக்கு வந்திருந்தது டெங்கு காய்ச்சல் எனத் தெரியவந்ததாம். இதையடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அக்குழந்தை சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தது.
தகவலறிந்த அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இப்பகுதியில் டெங்கு மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.