கடனாநதி அணையில் மூழ்கி இறந்த சென்னை இளைஞர் உடல் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள கடனாநதி அணையில் மூழ்கி இறந்த சென்னை இளைஞரின் உடல் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள கடனாநதி அணையில் மூழ்கி இறந்த சென்னை இளைஞரின் உடல் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் பார்த்திபன் (21). மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள அழகப்பபுரம் கிராமத்துக்கு தன் நண்பர் ஆரோக்கியராஜ் திருமணத்துக்கு பார்த்திபன் வந்திருந்தார். திருமணம் முடிந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை கடனாநதி அணையில் குளிப்பதற்காகச் பார்த்திபன் மற்றும் அவர்து நண்பர்கள் அழகப்பபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வத்துடன் சென்றனர்.
புது அணைப் பகுதியில் மலையிலிருந்து தண்ணீர் வரும் பாதையில் குளித்தனராம். அப்போது பார்த்திபன் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். தகவலறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்புப் படையினர், நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வந்து பார்த்திபன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
மீண்டும் திங்கள்கிழமை காலை தேடுதல் பணியில் தொடர்ந்தது. சுமார் நான்கு மணி நேரத்துக்குப் பின் பார்த்திபன் உடலை மீட்டு, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com