கோவையில் முதியவர் சாவு

கோவையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

கோவையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், காரமடையைச் சேர்ந்தவர் பழனிசாமி (58). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் மற்றும் வயிற்றுப் போக்கு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் 5 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கோவை அரசு மருத்துவமனையில் கோவை, சித்தாபுதூரைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் (22), கணபதியைச் சேர்ந்த சிவசக்தி (35), ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த சைமல் சிங் (40), கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த அஷீத் (67), சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் (35), கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சின்னசாமி (70), காரமடையைச் சேர்ந்த ஜெயராமன் (67), வடமதுரையைச் சேர்ந்த ஜானகி (55), உக்கடத்தைச் சேர்ந்த ராமசாமி (75), போத்தனூரைச் சேர்ந்த அஜ்மு நிஷா (77), நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி (25), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி (55) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com