சென்னையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தன்னை முதல்வர் பதவியில் இருந்து நிர்பந்தப்படுத்தி விலகச் செய்ததாக சசிகலா தரப்பினர் மீது பன்னீர்செல்வம் நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். மக்களும், அதிமுக தொண்டர்களும் கேட்டுக் கொண்டால், ராஜிநாமாவை திரும்பப் பெற வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். அவரது புகாருக்கு சசிகலாவும், அமைச்சர்களும் பதிலளித்து விமர்சனம் செய்தனர்.
உடனடியாக, அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னை பொருளாளர் பதவியில் 10 ஆண்டுகளுக்கு முன் நியமித்தார். எனவே, என்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டு முன்பு அதிக அளவில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.