தமிழ்நாடு
தங்கச்சி மடத்தில் இலங்கை மீனவர்களின் பைபர் படகுகள் தீப்பிடித்து எரிந்து நாசம்
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடம் காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களின் 6 படகுகள், புதன்கிழமை தீப்பிடித்து எரிந்து நாசமாயின.
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடம் காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களின் 6 படகுகள், புதன்கிழமை தீப்பிடித்து எரிந்து நாசமாயின.
ராமேசுவரம் தீவு, தங்கச்சி மடம் காவல் நிலையம் அருகே இலங்கை மீனவர்களின் 6 பைபர் படகுகளும், விபத்துக்களில் சேதமடைந்த இரு சக்கர வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் புதன்கிழமை அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதில் படகுகள் முழுவதுமாக எரிந்து நாசமாயின.
தகவலறிந்த ராமேசுவரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். அப்போது, காவல் நிலையத்துக்குள்ளும் தீ பரவத் தொடங்கியது. இதையடுத்து, அங்கிருந்த ஆவணங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தங்கச்சி மடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.