நல்லவர்கள் ஆட்சியில் இருக்க கூடிய சூழலை ஏற்படுத்துவோம்: பன்னீர்செல்வம்

நல்லவர்கள் ஆட்சியில் இருக்க கூடிய சூழலை ஏற்படுத்துவோம்: பன்னீர்செல்வம்

நல்லவர்கள் ஆட்சியில் இருக்கக் கூடிய சூழலை அனைவரும் சேர்ந்து ஏற்படுத்துவோம் என்று முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை: நல்லவர்கள் ஆட்சியில் இருக்கக் கூடிய சூழலை அனைவரும் சேர்ந்து ஏற்படுத்துவோம் என்று முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக அவைத் தலைவரும் சசிகலாவின் ஆதரவளுருமான மதுசூதன், முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தது முதல்வர் பன்னீர்செல்வம் மதுசூதனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதிமுக மூத்த தலைவரான அவைத்தவலைவர் மதுசூதனை வரவேற்கிறேன். தனக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனுக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் பன்னீர்செல்வம், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோதும் அதிமுகவை காத்தவர் மதுசூதனன். அதிமுக பொதுச்செயலாளர் ஆக வேண்டியவர் மதுசூதனன். அவர் தற்போது அதிமுகவை மீட்கும் அறப்போரட்டதிற்கு தலைமையேற்க வந்துள்ளார்.
ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு அஞ்சித்தான் இந்த அறப்போராட்டத்தை நடத்துகிறோம். நல்லவர்கள் ஆட்சியில் இருக்க கூடிய சூழலை அனைவரும் சேர்ந்து ஏற்படுத்துவோம். கபட நாடகத்தை அரங்கேற்றியவர் சசிகலாதான் என்று கூறிய பன்னீர்செல்வம், சசிகலாவுடன் யாரும் தொடர்பு வைக்க கூடாது என அன்றைக்கே முதல்வர் ஆணையிட்டார் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வி.கே.சசிகலாவுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதத்தை வாசித்துக் காட்டினார் பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com