ஓபிஎஸ்-சசிகலா: காலை முதல் மாலை வரை...!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா ஆகியோர் தனித் தனியே ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த பிறகு தமிழக அரசியல் களம் மேலும் விறுவிறுப்படைந்துள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா ஆகியோர் தனித் தனியே ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த பிறகு தமிழக அரசியல் களம் மேலும் விறுவிறுப்படைந்துள்ளது.
வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்ற நிகழ்வுகள் விவரம்:
நண்பகல் 12: அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் ஓ.பி.எஸ். இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு ஆதரவைத் தெரிவித்தார்.
பிற்பகல் 1: அதிமுகவின் மூத்த உறுப்பினரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜே.சி.டி.பிரபாகர், ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
பிற்பகல் 3.30: மும்பையில் இருந்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை திரும்பினார்.
மாலை 4.30 மணி: ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்திக்க, தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
மாலை 5: அதிமுகவின் மூத்த உறுப்பினர்களான பி.எச்.பாண்டியன், மதுசூதனன் ஆகியோருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்.
மாலை 6.45: போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரின் நினைவிடங்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இரவு 7.20: தனது தலைமையில் ஆட்சி அமைக்க அனுமதி கோரி, ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்திக்க ஆளுநர் மாளிகைக்குச் சென்றார் வி.கே.சசிகலா.
இரவு 8: ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த பிறகு, ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு போயஸ் தோட்ட இல்லத்துக்குச் சென்றார் சசிகலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com