தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கக் கோரி நடத்தப்பட இருந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒத்திவைத்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்ட அறிவிப்பு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போதைய அரசியல் சூழல் காரணமாக, இந்தப் போராட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.