வாக்களித்தவர்களின் குரலுக்கு முக்கியத்துவம் தருவேன் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டிவிட்டரில், எனக்கு வாக்களித்த மக்களின் குரலுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். மேலும், ஜெயலலிதாவின் கொள்கைகள் மற்றும் அதிமுகவின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் முடிவெடுப்பேன் என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் அவர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.