போராடினால் வெற்றி பெறலாம்:அரிபரந்தாமன்

பிரிந்து நிற்கும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராடினால் வெற்றி பெறலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்தார்.

பிரிந்து நிற்கும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராடினால் வெற்றி பெறலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அரிபரந்தாமன் பேசியதாவது:-
கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டுள்ள 11 தீர்மானங்களில் 7 தீர்மானங்கள் மக்களுக்கானது. கோரிக்கைகளுக்காக மக்கள் வீதிகளில் இறங்கி போராடினால்தான், அவசரச் சட்டமே கொண்டு வர முடியும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியும் இன்று வரை ஓய்வு பெற்ற நீதிபதிக்கு ஓய்வூதியம் வழங்கும் முறை அமல்படுத்தப்படவில்லை.
கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தனியார் மயத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. நீட், மீனவர், காவிரி மேலாண்மை வாரியம், 7 தமிழர்கள் விடுதலை, லோக்பால், லோக் ஆயுக்த உள்ளிட்ட பிரச்னைகளை தொழிற்சங்கங்கள் விவாதிக்க வேண்டும். அதன்படி, பிரிந்து நிற்கும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராடினால் வெற்றி பெறலாம் என்றார்.
முன்னதாக, சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் பேசியதாவது:-
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நியாய விலைக் கடைக்கு அரசு அனுப்பும் பொருள்களை சரியான எடையளவுடன் அனுப்புமாறு கேட்கிறோம். எந்த அரசும் அதைச் செய்வதில்லை. தமிழகத்தில் 2 கோடியே 4 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஆனால், இன்றளவும் போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.
அரசு அறிவித்ததைப் போன்று ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கவேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com