அசாதாரண சூழலுக்கு ஆளுநர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக அரசியலில் நிலவி வரும் அசாதாரண சூழலுக்கு ஆளுநர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
அசாதாரண சூழலுக்கு ஆளுநர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசியலில் நிலவி வரும் அசாதாரண சூழலுக்கு ஆளுநர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுகவில் தற்போது நடைபெறும் அதிகாரப் போட்டியால் அரசியல் குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் தமிழகத்தில் நிலையான ஆட்சி ஏற்படுமா, ஏற்படாதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தற்போது வலுத்து வருகிறது.
 எனவே, தமிழக ஆளுநர் உண்மை நிலையை முற்றிலுமாக உணர்ந்து சட்டத்துக்கு உட்பட்டு ஜனநாயக மரபுகளைக் காக்க ஆளுநர் ஒரு காலக்கெடுவுக்குள் முடிவு எடுத்து தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் அசாதாரண சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com