ஆற்றில் இறந்து மிதந்த குழந்தை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில், சனிக்கிழமை பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் மிதந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில், சனிக்கிழமை பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் மிதந்தது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் முதலைப் பண்ணை அருகே உள்ள காவிரி ஆற்றில், பிறந்து ஓரிரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில், ஆற்றில் மிதந்தது. இதைக் கண்ட அப்பகுதியினர், போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த ஒகேனக்கல் போலீஸார் குழந்தையின் உடலை மீட்டு, பென்னாகரம் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், பிறந்த குழந்தை தொப்புள் கொடியுடன் ஆற்றில் தூக்கி வீசப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com