ஆளுநர் அழைத்தால் அடுத்த நிமிடம் அதிமுக ஆட்சி: அமைச்சர் ஒ.எஸ்.மணியன்

ஆளுநர் அழைப்பு விடுத்தால் அடுத்த நிமிடமே அதிமுக ஆட்சி அமைக்கப்படும் என தமிழக அமைச்சர் ஒ.எஸ்.மணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை: ஆளுநர் அழைப்பு விடுத்தால் அடுத்த நிமிடமே அதிமுக ஆட்சி அமைக்கப்படும் என தமிழக அமைச்சர் ஒ.எஸ்.மணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இன்று 2வது நாளாக கூவத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களை சந்திக்க சென்றார்.
அப்போது, அமைச்சர் ஒ.எஸ்.மணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், அதிமுக ஆட்சியை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வோடு சசிகலா செயல்பட்டு வருகிறார். பத்து எம்.பி.,க்களை வைத்துக்கொண்டு பன்னீர்செல்வத்தால் ஒன்று செய்யமுடியாது.
ஆளுநர் அழைப்பு விடுத்தால் அடுத்த நிமிடமே ஆட்சியை அமைக்க தயாராக இருப்பதாக நம்பிக்கையுடன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com