எம்எல்ஏக்களிடம் போலீஸார் விசாரணை

கூவத்தூர்பேட்டையில் "கோல்டன் பே' எனும் தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து வருவாய், காவல் துறைகளின் உயரதிகாரிகள் சனிக்கிழமை காலை நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
எம்எல்ஏக்களிடம் போலீஸார் விசாரணை

கூவத்தூர்பேட்டையில் "கோல்டன் பே' எனும் தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து வருவாய், காவல் துறைகளின் உயரதிகாரிகள் சனிக்கிழமை காலை நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
உயர்நீதிமன்றவின் உத்தரவின்பேரிலும், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் முத்தரசி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்ட், காவல் ஆய்வாளர் ஜான் விக்டர், செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோர் இந்த விசாரணையை மேற்கொண்டனர். இதையடுத்து, அங்கிருந்து பெறப்பட்ட தகவல்களை அறிக்கையாகத் தயாரித்து தாக்கல் செய்யப்படும் என டிஎஸ்பி தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
இந்த நிலையில், விடுதியில் எம்எல்ஏக்கள் தங்கி இருப்பதால், கூவத்தூர் பேட்டை, நாவக்கால் காலனி ஆகிய பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com