சென்னை: முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தொடர வேண்டும் என அதிமுக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி தெரிவித்தார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதாவின் அம்மாவின் மறைவிற்கு பின் கட்சியை யார் வழிநடத்தப் போகிறார்கள் என அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் காத்திருந்தனர் ஜெயலலிதா மறைந்து 20 நாட்களுக்குள் அவர்களாகவே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி பதவியிறக்கம் செய்து முதல்வராகும் முயற்சிகள் நடைபெற்றுள்ளது. இதனை 7 கோடி தமிழர்களும், ஓன்றரை கோடி அதிமுகவினரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே பதவியில் நீடிக்க வேண்டும், பணிகளை தொடரவேண்டும், அதிமுகவை வழி நடத்திச்செல்ல வேண்டும் என கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் எங்களது ஆதரவை தெரிவிக்க வந்தோம் என்று கூறினார்.
அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செங்குட்டுவன், சத்யபாமா, வனரோஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.