நினைவு இல்லமாக ஜெயலலிதா வீடு: கையெழுத்து இயக்கம் தொடங்கியது

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வலியுறுத்தி, கையெழுத்து இயக்கத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
நினைவு இல்லமாக ஜெயலலிதா வீடு: கையெழுத்து இயக்கம் தொடங்கியது

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வலியுறுத்தி, கையெழுத்து இயக்கத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள போயஸ் தோட்டம் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும், அதிமுகவினர் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக மனோஜ் பாண்டியன் தலைமையில் வழக்குரைஞர்கள் சிலர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் அதிமுகவின் தொண்டர்களிடம் கையெழுத்து பெறப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com