தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு தொடர வேண்டும் என்பதே விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்றார் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில், ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு, 4 ஆண்டு காலம் தொடர வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு. ஆளும் கட்சியான அதிமுகவை பலவீனப்படுத்துவதில் உள்கட்சி முரண்பாடு மட்டுமன்றி, புறவெளியிலிருந்தும் அழுத்தங்கள் தரப்படுகிறது.
குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வரவோ அல்லது விரைவில் பொதுத் தேர்தலை மக்களிடம் திணிப்பதற்கோ முயற்சி நடப்பதாக தோன்றுகிறது. எனவே, மத்திய அரசு தங்களுக்கு சாதகத்தை ஏற்படுத்துகின்ற முயற்சிகளை எடுக்கக் கூடாது என்றார் திருமாவளவன்.