ஆளுநரை குறை சொல்ல முடியாது: தமிழிசை செளந்தரராஜன்

ஆளுநரை குறை சொல்ல முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
ஆளுநரை குறை சொல்ல முடியாது: தமிழிசை செளந்தரராஜன்

ஆளுநரை குறை சொல்ல முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆளுநர் வித்தியாசாகர் ராவை பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்த பின்னர், சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இது சுப்பிரமணியன் சுவாமியின் சொந்தக் கருத்து. பாஜகவின் நிலைப்பாடு அல்ல.
அதிமுக உள்கட்சி பூசலுக்கு ஆளுநரை குறை சொல்ல முடியாது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மக்களுக்கென ஒரு கருத்து இருக்கும். அதை எம்எல்ஏக்களிடம் தெரிவிக்கின்றனர். அது எம்எல்ஏக்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்கள் மக்கள் கருத்துக்கு செவிசாய்க்கின்றனர். மக்களின் பக்கம் பாஜக இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com