ஒற்றை யானை அட்டகாசம்

ஆம்பூர் அருகே காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒற்றை யானை புகுந்து அட்டகாசம் செய்தது.

ஆம்பூர் அருகே காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒற்றை யானை புகுந்து அட்டகாசம் செய்தது.
ஆம்பூர் அருகே துருகம் காப்புக்காடு மிட்டாளம் வனப்பகுதியில் ஒற்றை யானை புகுந்தது. அது ஜம்பு ஊட்டல், துலுக்கன் கானாறு, கரடிக்குட்டை ஆகிய பகுதிகளில் உள்ள புளிய மரங்களை உடைத்து தேசப்படுத்தி வருகிறது. அதனால் புளியமர மகசூல் சேதமடைந்துள்ளது. புளியமரங்களை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் மகசூலை சாகுபடி செய்ய முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் அந்த யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com