சென்னை: முதல்வர் தலைமைச் செயலகம் வர உள்ள நிலையில் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் வர உள்ளார்.
இதையடுத்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தற்போதைய சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.