தலைமைச் செயலகம் செல்லும் பன்னீர்செல்வம்; கூவத்தூர் புறப்படுகிறார் சசிகலா

தனது பதவியை ராஜினாமா செய்து ஒரு வார காலத்துக்குப் பிறகு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகத்துக்குச் செல்கிறார்.
தலைமைச் செயலகம் செல்லும் பன்னீர்செல்வம்; கூவத்தூர் புறப்படுகிறார் சசிகலா


சென்னை: தனது பதவியை ராஜினாமா செய்து ஒரு வார காலத்துக்குப் பிறகு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகத்துக்குச் செல்கிறார்.

தலைமைச் செயலகத்துக்குச் சென்று எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன் என்று கடந்த வார இறுதியில் பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

அதன்படி, இன்று அவர் தலைமைச் செயலகத்துக்கு வர உள்ளார். தலைமைச் செயலகத்தில் முக்கியக் கோப்புகளில் அவர் கையெழுத்திட உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்துக்கு செல்லும் பாதையில் போராட்டத்தில் ஈடுபட சசிகலா தரப்பினர் திட்டமிட்டிருப்பதாகவும் தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில், கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்க 3வது  நாளாக, கட்சியின் பொதுச் செயலர் சசிகலா புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த இரண்டு நாட்களாக கூவத்தூர் சென்று, அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்துப் பேசிய சசிகலா, இன்றும் அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளத

முதல் நாள் 3 மணி நேரமும், 2வதுநாளாக நேற்று 5 மணி நேரமும் எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com