முதல்வர் பன்னீர்செல்வத்தின் கையை வெட்டப்போவதாக மிரட்டிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி. கலைராஜன் மீது சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ள கலைராஜன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முதல்வரை மிரட்டும் வகையில் பேசியதாக கலைராஜன் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கலைராஜன் மீது கொலை மிரட்டல் உள்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.