மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்டோர் தொடர்புடைய சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கியது. சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், சசிகலா, சுதாகரன், இளவரசியை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
இதையடுத்து நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் கூறியதாவது:
பழைய பாட்டுத்தான் இருந்தாலும்...
தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்..
எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்.. என்று அவர் கூறியுள்ளார்.