தமிழ்நாடு
எம்எல்ஏக்களை கடத்தியதாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு
அதிமுக எம்எல்ஏக்களை கடத்தியதாக, அக்கட்சியின் பொதுச் செயலர் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்களை கடத்தியதாக, அக்கட்சியின் பொதுச் செயலர் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் 2 பேர் மீதும் வழக்குப் பதிவாகியுள்ளது.
தம்மையும் பிற எம்எல்ஏக்களையும் சசிகலா உள்ளிட்டோர் கடத்திச் சென்றதாக கூவத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சசிகலா தரப்பினரின் கட்டுப்பாட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் விடுதியில் இருந்து மாறு வேடத்தில் தப்பி வந்ததாகக் கூறி, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ சரவணன் இன்று இந்த புகாரைப் பதிவு செய்துள்ளார்.
கூவத்தூர் டிஎஸ்பி எட்வார்டு, கூவத்தூர் சொகுசு விடுதியில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.