சசிகலாவுக்கு கால அவகாசம் வழங்க முடியாது; உடனடியாக சரணடைய உத்தரவு: உச்ச நீதிமன்றம்

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு கால அவகாசம் வழங்க முடியாது என்றும், அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்து.
சசிகலாவுக்கு கால அவகாசம் வழங்க முடியாது; உடனடியாக சரணடைய உத்தரவு: உச்ச நீதிமன்றம்


புது தில்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு கால அவகாசம் வழங்க முடியாது என்றும், அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்து.

சசிகலா தரப்பு வழக்குரைஞர், உச்ச நீதிமன்றத்தில் வாய்மொழியாக வைத்த கோரிக்கையை நீதிபதிகள் உடனடியாக நிராகரித்தனர்.

மேலும், சசிகலாவுக்கு கால அவகாசம் வழங்க முடியாது என்றும், பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போயஸ் தோட்ட இல்லத்தில் இருக்கும் சசிகலா, சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூரு செல்வது குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், அவருக்கு கால அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கால அவகாசம் தர மறுத்திருந்தாலும், இன்றைக்குள் சரணடைய வேண்டும் என்று காலக்கெடு எதுவும் உச்ச நீதிமன்றம் விதிக்காவிட்டாலும், 24 மணிநேரத்துக்குள் அவர்கள் சரணடையாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கையை காவல்துறை எடுக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com