டிஜிபி, காவல் ஆணையாளருடன் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.
அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி வா.மைத்ரேயன், முன்னாள் எம்பிக்கள் மனோஜ் பாண்டியன் ஆகியோரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் செவ்வாய்க்கிழமை தனித் தனியாகச் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ளது, சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளிட்டவை குறித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன், பெருநகர சென்னை காவல் துறை ஆணையாளர் ஜார்ஜ் ஆகியோருடன் ஆளுநர் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.