மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 33.01 அடியாகச் சரிந்தது.
காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 34 கன அடியாகச் சரிந்தது.
அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33.01 அடியாகச் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 8.77 டி.எம்.சி.