விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவில்லா பெட்டிகளின் இருக்கைகள் பயணிகளுக்கு ரூ.50-க்கு சட்டவிரோதமாக விற்கப்படுவதாக தெற்கு ரயில்வேக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதனையடுத்து சென்னை சென்ட்ரல் -கோவை இன்டர்சிட்டி விரைவு ரயிலில் உள்ள முன்பதிவில்லா பெட்டிகளின் இருக்கையை சட்டவிரோதமாக விற்ற நபரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
இந்த நபர், விரைவு ரயிலில் உள்ள முன்பதிவில்லா பெட்டியை ஆக்கிரமிப்பு செய்து பயணிகளுக்கு ஒரு இருக்கை ரூ.50-க்கு விற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது புகார் அளிக்க வசதியாக தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
உதவி எண்கள் தெற்கு ரயில்வே
அலுவலகம் : 044 2535 4405
சென்னை : 044 2535 4457
சேலம் : 0427 243 1010
பாலக்காடு : 0491 255 2755
திருவனந்தபுரம் : 0471 232 6484
மதுரை : 0452 230 8250
திருச்சி : 0431 241 8992
ரயில்வே
பாதுகாப்பு படை : 182