தமிழக ஆளுநர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவை புதன்கிழமை (பிப்.15) இரவு சந்தித்த பிறகு, தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசிய பிறகு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு புதன்கிழமை இரவு ஆளுநர் நேரம் ஒதுக்கியிருந்தார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவை புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் சந்தித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரவு 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டனர்.
அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், அமைச்சர் பாண்டியராஜன், மூத்த நிர்வாகி சி.பொன்னையன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பு குறித்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ அல்லது அவரது ஆதரவு நிர்வாகிகளோ எந்தக் கருத்தையும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கவில்லை.
சந்திப்புக்குப் பின்னர் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தினார்.