ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்û கக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தார்.
புதுச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரோ விஞ்ஞானிகள் பிஎஸ்எல்வி-சி 37 என்ற ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளனர். இது உலக சாதனை. சாதனை படைத்த இஸ்ரோவுக்கு புதுச்சேரி மக்கள், அரசு சார்பில் வாழ்த்துகள் என்றார்.