எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்திருப்பதை திமுக வரவேற்பதாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் வித்தியாசாகர்ராவ் இன்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் 15 நாட்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், காலம் கடந்து ஆளுநர் அறிவித்தாலும் இதனை வரவேற்கிறோம். 15 நாட்கள் எதற்காக காலஅவகாசம் தரப்பட்டது என தெரியவில்லை. இது குதிரை பேரங்களுக்கு வழிவகுக்கும் என்றார்.