பெங்களூரு : சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலாவை சிறைக்குள் சென்று அவரது வழக்குரைஞர்கள் இன்று சந்தித்தனர்.
சசிகலாவின் வழக்குரைஞர்கள் செந்தில், அசோகன் ஆகியோர் இன்று காலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்தனர். அப்போது, சிறையில் முதல் வகுப்பு வழங்கிட அனுமதி கோரும் மனுவில் சசிகலாவிடம் கையெழுத்து பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.