சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ நட்ராஜ் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பேரவையில் நாளை நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சித்தாவல் தடை சட்டத்தால் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி போனாலும் கவலையில்லை எனக் கூறியுள்ளார். தனது வாக்கு யாருக்கு என்பதை தெரிவிக்கவில்லை.
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்த 124 இருந்த எம்எல்ஏக்களின் ஆதரவு தற்போது 123 ஆக குறைந்துள்ளது.
ஒருங்கிணைந்த அதிமுகவுக்கே எனது வாக்கு என நேற்று முன்தினம் நட்ராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.