ஓ.பி.எஸ். -எச்.ராஜா சந்திப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. தேசியச் செயலர் எச்.ராஜா வியாழக்கிழமை (பிப்.16) இரவு சந்தித்துப் பேசினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. தேசியச் செயலர் எச்.ராஜா வியாழக்கிழமை (பிப்.16) இரவு சந்தித்துப் பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளது. இந்த அரசு சட்டப்பேரவையில் தமது பலத்தை நிரூபிக்க, ஆளுநர் வித்யாசாகர் ராவ் 15 நாள்கள் அவகாசம் அளித்துள்ளார். இதையடுத்து தமது தலைமையிலான அரசின் பெரும்பான்மையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் சனிக்கிழமை (பிப்.18) நிரூபிக்க உள்ளார்.
இந்த நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. தேசியச் செயலர் எச்.ராஜா சந்தித்துப் பேசினார். ஓ.பன்னீர்செல்வம் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com