நாளைய சட்டப்பேரவை கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கொறடா விஜயதாரணி உத்தரவிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருப்பதால் அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் திமுக ஆட்சி அமைந்தால் காஙகிரஸ் ஆதரவு தரும், அதேநேரத்தில் அதிமுக எந்த ஆதரவும் கோரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் காங்கிரஸ் வசம் 8 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.