சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்தார்.
திருப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள ஆட்சி எத்தனை நாள்கள் இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியாது. சட்டப் பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக யாருக்கும் ஆதரவளிக்காது. எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ.பன்னீர்செல்வம் என முதல்வராக யார் வந்தாலும் ஆதரவு கிடையாது.
தமிழகத்தின் எதிர்கால அரசியல் திமுகவின் வெற்றியைப் பொருத்தே அமையும். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்றார்.