எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவர், செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதற்கு வாழ்த்துகள். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுகவை உடைக்கலாம், ஆட்சியை கவிழ்க்கலாம் என பாஜக முயற்சித்தது. ஆனால் அதற்கு வாய்ப்பின்றி அதிமுகவினர் நல்ல முடிவு எடுத்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் கல்வீச்சு நடந்திருந்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.