எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விருப்பமில்லை: எம்எல்ஏ அருண்குமார்

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விருப்பமில்லை என்று கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்குமார் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விருப்பமில்லை: எம்எல்ஏ அருண்குமார்

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விருப்பமில்லை என்று கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்குமார் கூறியுள்ளார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 122 ஆக குறைந்துள்ளது.

கோவை மாநகர அதிமுக செயலாளரும் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான அருண்குமார், சசிகலாவுக்கு ஆதரவாக கடந்த பத்து நாட்களாக கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ஊருக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கோவை மாநகர செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள அருண்குமார், கட்சியின் தலைமையின் முடிவுகள் பிடிக்கவில்லை என்பதால் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் சொந்த ஊருக்கு திரும்புகிறேன்.

மேலும், எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயார் என்றும் மக்கள், தொண்டர்களின் உணர்வை அறிந்து செயல்பட விருப்புவதாகவும், தொகுதி மக்களின் கருத்தை அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com